சூடான செய்திகள் 1

ஆசிரியர்கள் இருவர் இணைந்து செய்த காரியம்…

(UTV|COLOMBO)-மொணராகல பகுதியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் வரலாறு மற்றும் தகவல் தொழிநுட்பம் கற்பிக்கும் ஆசிரியர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வரலாறு பாடத்தை கற்பிக்கும் ஆசிரியர் குறித்த மாணவியை வீட்டிற்கு அழைத்து துஷ்பிரயோகம் செய்துள்ளதுடன் பின்னர் தனது நண்பரான தகவல் தொழிநுட்ப ஆசிரியரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பின்னர் குறித்த சந்தேக நபர் தன்னுடைய தொலைபேசியில் எடுத்த காணொளியை சமூக வலைத்தளத்தில் (facebook) பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஆசிரியர்கள் இருவரும் இதற்கு முன்னரும் இன்னும் பல மாணவிகளை துஷ்பிரயோங்கள் செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களை இன்று (25) மொணராகல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதுடன் மொணராகல குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தனியார் மருத்தவ சேவைகள் சிலவற்றுக்கான வெட் வரி நீக்கம்

மதஸ்தலங்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு! தொலைபேசி இலக்கமும் அறிமுகம்

“வடமாகாணம் 4 சத வீத பங்களிப்பை நல்குகின்றது” ஏற்றுமதியில் வடக்கையும் தீவிரமாக ஈடுபடுத்த திட்டங்கள் !-அமைச்சர் ரிஷாட்