சூடான செய்திகள் 1

ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர் தேசிய அடையாள அட்டை…

(UTV|COLOMBO)  2019 ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டையை ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர் விநியோகிக்கப்படும் என ஆட்பதிவு திணைக்களத்தின் செயற்பாட்டு மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆணையாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

மேலும் இதுவரையில் 1 இலட்சத்து 75 ஆயிரம் விண்ணப்பங்கள் ஆட்பதிவுத் திணைக்களத்திற்குக் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

எனினும் சுமார் 25 ஆயிரம் மாணவர்களின் விண்ணப்பங்கள் கிடைக்க வேண்டியுள்ளன. இந்த விண்ணப்பங்களை விரைவாக ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்குமாறு அவர் பாடசாலைகளின் அதிபர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

 

 

 

Related posts

ஐஎஸ் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் பொட்ட நவ்பரின் மகன்!

பல்கலைகழக நடவடிக்கைகள்-பாதுகாப்பை உறுதிப்படுத்தியதன் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கலாம்

சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் குறைவு…