உள்நாடு

அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகள் வருவதில் தாமதமில்லை

(UTV | கொழும்பு) – இலங்கையினால் முன்பதிவு செய்யப்பட்டுள்ள 10 இலட்சம் தடுப்பூசிகள் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் கிடைக்கும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இந்தியா, தடுப்பூசி ஏற்றுமதியை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளமை இதனைப் பாதிக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ராசெனெகா கொவிட்-19 தடுப்பூசிகளின், அனைத்து ஏற்றுமதிகளையும் இந்தியா தற்காலிகமாக இடைநிறுத்தி உள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதிகரித்துவரும் நோயாளர்களின் எண்ணிக்கை, எதிர்காலத்தில் உள்நாட்டு தேவையை அதிகரிக்கக்கூடும் என்ற காரணத்தினால், இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சில தனியார் பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பில்

வைத்தியசாலையில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான வைத்தியருக்கு நீதி கிட்ட வேண்டும் – சஜித் பிரேமதாச

editor

சந்திம வீரக்கொடிக்கு கொவிட் தொற்று உறுதி