உள்நாடு

அறுகம்பை தாக்குதல் தொடர்பில் மாலைதீவு பிரஜை உட்பட 6 பேர் கைது

அம்பாறை, அறுகம்பை பிரதேசத்தில் தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிட்ட சம்பவம் தொடர்பில் மாலைதீவு பிரஜை உட்பட 6 பேர் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள் பயங்கரவாத புலனாய்வு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்களை இலக்கு வைத்து அறுகம்பை பிரதேசத்தில் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு அண்மையில் தகவல் கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சுமார் 80 இலட்சம் பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு

இனவாத அரசியலுக்கு இடமில்லை – ஜனாதிபதி அநுர

editor

பொதுச் சொத்துக்கள், சமூகத்தின் சொத்தாக பாதுகாக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி அநுர

editor