உள்நாடு

அருட்தந்தை சிறில் காமினிக்கு மீண்டும் சிஐடி அழைப்பு

(UTV | கொழும்பு) – குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நாளை மறுதினம்(15) முன்னிலையாகுமாறு அருட்தந்தை சிறில் காமினிக்கு மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் அவர் வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்து தொடர்பில், தேசிய புலனாய்வு சேவையின் பணிப்பாளர் நாயகம் சுரேஷ் சலே கடந்த மாதம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காகவே அருட்தந்தை சிறில் காமினிக்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் அண்மையில் அழைப்பு விடுத்திருந்தது.

எனினும், அவருக்குப் பதிலாக அன்றைய தினம் மூன்று அருட்தந்தையர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகினர்.

வாக்குமூலம் வழங்குவதற்காக ஒருவார காலம் அவகாசம் வழங்குமாறு குறித்த அருட்தந்தையர்கள் கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

    

Related posts

அடுத்த மாதம் முதல் தபால் கட்டணங்களில் திருத்தம்

ரவி உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு