உள்நாடு

அரிசி இறக்குமதி – 67,000 மெட்ரிக் தொன் வந்தடைந்தது

தனியார் துறையின் அரிசி இறக்குமதிக்கான காலக்கெடு நேற்று (20) நள்ளிரவுடன் முடிவடைவதற்கு முன்னர் வர்த்தகர்களால் 67,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டதாக இலங்கை சுங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

உள்ளூர் சந்தைகளில் பல வகையான அரிசியின் பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவை சமீபத்தில் காணப்பட்டதால், உள்நாட்டு விநியோகத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த இறக்குமதி இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ரணிலுக்கு பிரித்தானிய பிரதமர் பாராட்டு

ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அமைச்சரவை அமைச்சுக்களில் மேலும் சில மாற்றங்கள்