உள்நாடு

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் இன்று தொழிற்சங்க நடவடிக்கையில்

(UTV | கொழும்பு) – ஐந்து மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளில் இன்று தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதித்துவம் இல்லாமல் சுகாதார அமைச்சினால் 500 வைத்தியர்களுக்கான நியமனப் பட்டியல் வெளியிடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் குறிப்பிட்டார்.

இதற்கமைய, நுவரெலியா, மன்னார், திருகோணமலை, இரத்தினபுரி மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளில் இன்று காலை முதல் தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related posts

பொத்துவில் ஆதார வைத்தியசலையில் கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறும் விடுதி!

முதல் கட்டமாக 7 மாவட்டங்களுக்கான வாக்கு சீட்டுக்களை அச்சிடும் பணிகள் தொடர்கிறது

திருத்தப்பட்ட தபால் கட்டணங்கள் இன்று முதல் அமுலுக்கு