சூடான செய்திகள் 1

அரச ஊழியர்களுக்கு 2500 ரூபாய் கொடுப்பனவு ஜூலை மாதம் முதல்

(UTV|COLOMBO) அரச ஊழியர்களுக்கு 2500 ரூபாய் மாதாந்த இடைக்கால கொடுப்பனவு வழங்கும் சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டுள்ளதோடு இந்த கொடுப்பனவு எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வழங்க இம்முறை பாதீட்டின் மூலம் பரிந்துரைக்கப்பட்டது.

திறைச்சேரியின் அனுமதியுடன் அரச நிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சால் அமைச்சுக்களில் செயலாளர்கள் , மாகாண தலைமை செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் பிரதானிகளுக்கு மேற்படி சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இடைக்கால கொடுப்பனவாக 2500 ரூபாய் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் வழங்கப்பட்டாலும் , அரச ஊழியர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் 7800 ரூபாய் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு தொடர்ந்தும் அவ்வாறே பேணப்படும் என நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

 

 

 

 

Related posts

IS அமைப்பில் இணைந்துகொண்டு நாடு திரும்பியவர்கள் தொடர்பில் அறிந்திருந்ததாக பிரதமர் தெரிவிப்பு

மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர தொடர்ந்தும் விளக்கமறியலில்

வில்பத்து பாதை வழக்கு – அடுத்த வருடம் மார்ச் மாதம் மீண்டும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடிவு