உள்நாடு

அரசுக்கு எதிராக மூன்றாவது நாளாக இன்றும் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டம்

(UTV | கொழும்பு) – நாட்டின் பல பகுதிகளிலும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கோரி தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

காலி முகத்திடலில் கடந்த 09ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் மூன்றாவது நாளாக இன்றும் (11) தொடர்கின்றது.

அதிகளவானோர், காலி முகத்திடலில், ஜனாதிபதி செயலக வளாகத்திற்கு முன்பாக கூடி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும், பொருளாதார முன்னேற்றத்திற்கு கொள்கை அடிப்படையிலான தீர்வு வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பதாகைகளை ஏந்திய வண்ணம் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Related posts

காட்டு யானைகள் தொல்லையால் அக்கரைப்பற்று தேசிய பாடசாலை மதிற் சுவர், மக்கள் குடியிருப்புக்கு பலத்த சேதம்

editor

அரசாங்கம் ஏமாற்று வேலைகளை செய்கிறது – சஜித் பிரேமதாச

editor

இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

editor