வகைப்படுத்தப்படாத

அரசாங்க தரப்பின் முக்கிய கூட்டம் ஒன்று இன்று

(UDHAYAM, COLOMBO) – அரசாங்க தரப்பின் முக்கிய கூட்டம் ஒன்று இன்று மாலை இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடர் மற்றும் அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்து இதன் போது ஆரயப்படவுள்ளதாக, அரசாங்க தரப்பின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.

அதுபோல், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியன இணைந்து அமைத்துள்ள நல்லாட்சி அரசாங்கம் தொடர்பிலும் இதன்போது முக்கிய கலந்துரையாடல் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுகிறது.

Related posts

சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் 12 பேர் உயிரிழப்பு

இயற்கை அனர்த்தங்களால் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

Navy nabs 2 persons with heroin