சூடான செய்திகள் 1

அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் பேரணி

(UTV|COLOMBO)-அரசாங்கத்தின் தற்போதைய வேலைத்திட்டங்களுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘மக்கள் சக்தி படை’ மற்றும் மக்கள் பேரணி என்பன இன்று மாலை கொழும்பில் இடம்பெறவுள்ளது.

பிற்பகல் 2 மணிக்கு லிப்டன் சுற்றுவட்டத்தில் ஆரம்பமாகும் இந்த எதிர்ப்பு பேரணி, விஹாரமாதேவி பூங்கா வரையில் சென்று அங்கு மக்கள் சந்திப்பை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, ஒன்றிணைத்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது.

இந்த எதிர்ப்பு போராட்டம் மற்றும் பேரணி தொடர்பில் மக்களுக்கு தெளிவூட்டும் பொருட்டு ஒன்றிணைந்த எதிர் கட்சியின் உறுப்பினர்களால், நேற்று மாலை கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சர்வகட்சி அரசு தயார்? ஹக்கீம் மனோ மும்முரம்

ஆடைத்தொழிற்சாலையில் தீ விபத்து

எவன்கார்ட் வழக்கு ஒத்திவைப்பு