உள்நாடுபிராந்தியம்

அயகம பகுதியில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு கொலை – ஒருவர் கைது

அயகம, சமருகம பகுதியில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளாகி பலத்த காயமடைந்த குறித்த நபர், இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் சமருகம பகுதியைச் சேர்ந்த 57 வயதுடையவர் என குறிப்பிடப்படுகின்றது.

அயலவர் ஒருவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 40 வயதுடைய சந்தேக நபரை சமருகம பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

editor

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியாவிற்கு

தாமரை கோபுரத்தை பார்வையிட வருபவர்களுக்கான அறிய வாய்ப்பு!