உள்நாடுகாலநிலை

அம்பாறையில் மழையுடன் கூடிய காற்று

அம்பாறையில் மழையுடன் கூடிய காற்றுடன் காலநிலையில் திடீரென மாற்றம் ஏற்பட்டமையினால்   பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டனர்.

திங்கட்கிழமை (06) இரவு நேரத்தில் சில இடங்களில் மழை குறைந்து காற்றுடன் கூடிய காலநிலை காணப்பட்டது.  

குறிப்பாக நாவிதன்வெளி  கல்முனை முஸ்லிம் பிரிவு தமிழ் உப பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட  பிரதான போக்குவரத்து பாதைகள் நீர் நிரம்பியது.

திடீரென பெய்த மழை காரணமாக ல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட பாண்டிருப்பு,  கல்முனை சாய்ந்தமருது,  மருதமுனை நற்பிட்டிமுனை பிரதேச பிரதான பாதைகளில் நீர் நிரம்பி ஓடுவதுடன் வாகன சாரதிகள் பாதசாரிகள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

சில வீதிகளில் வடிகான்களுக்கு மேலாக மழை நீர் பரவுவதால் வீடுகளுக்குள் நீர் உட் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதால் அதனை தடுப்பதற்கான நடவடிக்கையை பொது மக்கள் மேற்கொண்டு வருவதை அவதானிக்க முடிந்தது.

Related posts

அலுவலக ரயில்கள் திங்கள் முதல் சேவையில்

நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு

editor

20வது அரசியலமைப்பு திருத்தம் – குழு அறிக்கை நாளை