அரசியல்உள்நாடு

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கான உதவியாளர்களின் எண்ணிக்கையில் மட்டுப்பாடு

தற்போதைய அரசாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் உதவிக்காக நியமிக்கப்படக்கூடிய அதிகபட்ச ஊழியர்களின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அமைச்சர்களுக்கான உதவி ஊழியர்கள் அதிகபட்சமாக 15 பேருக்கு உட்பட்டவர்கள் என்பதோடு, பிரதி அமைச்சர்களுக்கான உதவியாளர்களின் எண்ணிக்கை 12 பேருக்கு மேற்படாத வகையில் காணப்பட வேண்டும்.

அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் கடமைகளை மிகவும் திறமையாக மற்றும் அனைத்து தரப்பினருடனும் நல்ல ஒருங்கிணைப்புடன் பணிகளை முன்னெடுத்துச் செல்ல இந்த உதவி ஊழியர்களை நியமிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்வரும் ஊழியர்களின் எண்ணிக்கையானது அதிகபட்ச எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கக்கூடாது என்று ஜனாதிபதி செயலாளர் என்.எஸ் குமாநாயக்க அனைத்து அமைச்சுகளின் செயலாளர்களுக்கும் எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Related posts

மூன்று புதிய வெளிநாட்டுத் தூதுவர்கள் நற்சான்றிதழ் பத்திரங்களை ஜனாதிபதி அநுரவிடம் கையளித்தனர்

editor

முட்டை விலை இன்னும் குறைக்கப்படவில்லை – பேக்கரி உரிமையாளர்கள்

பௌத்த மதகுருமார்களுக்கு ஆசிரியர் தொழில் வழங்க நடவடிக்கை – பிரதமர்