அரசியல்உள்நாடு

அனுரவின் உடல்நலம் பாதிப்பு – ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் வேண்டுகோள்

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்க உடல்களைப்பு காரணமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவர்கள் அவரை ஓய்வெடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர் என ஜேவிபியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

உடல்நிலை சரியில்லாததால் மாத்தறையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அனுரகுமாரதிசநாயக்க கலந்துகொள்ளவில்லை என டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

அனுரகுமார உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார், கடந்த சில நாட்களாக அவர் ஓய்வின்றி பிரச்சாரத்தில் ஈடுபட்டார், அவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார் இதன்காரணமாக மருத்துவர்கள் அவரை ஓய்வெடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்,என டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

பாராளுமன்ற தேர்தல் – உதய கம்மன்பில வேட்புமனுவில் கையொப்பமிட்டார்

editor

கண்டி – கலஹா– தெல்தோட்டை பல்லேகம பகுதியில் வாழும் மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை

ஜனாதிபதி அநுர வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை – ஜீவன் தொண்டமான்

editor