உள்நாடு

அதிவேக நெடுஞ்சாலையில் வேனின் டயர் வெடித்ததால் விபத்து – இருவர் பலி – 4 பேர் காயம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இருவர் உயிரிழந்துள்ளதோடு 4 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதிவேக நெடுஞ்சாலையின் அங்குணுகொலபெலஸ்ஸ பகுதியில் 175ஆவது கிலோமீற்றர் அருகே வேன் ஒன்றின் டயர் வெடித்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் 72 மற்றும் 44 வயதுடைய இரண்டு பெண்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

Related posts

பல புதிய ரயில் சேவைகளை அறிமுகப்படுத்த தீர்மானம்

editor

காவல்துறை உத்தியோகத்தர் இருவருக்கு 28 வருட சிறைத்தண்டனை [VIDEO]

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாளை இலங்கை வருகை

editor