அரசியல்உள்நாடு

அடுத்த வாரம் ஐரோப்பிய ஒன்றிய குழு இலங்கை வருகிறது – அமைச்சர் விஜித ஹேரத்

இலங்கைக்கு வழங்கப்பட்ட GSP+ வரிச் சலுகைகளை மீளாய்வு செய்வதற்காக ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (15) பாராளுமன்றத்தில் இந்த விடயத்தை வெளியிட்டார்.

இதேவேளை, சைப்ரஸில் உள்ள இலங்கை தூதரகம் மிக விரைவில் திறக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

Related posts

உணவுப் பொருட்களை பகிர்ந்தளிப்பது தொடர்பிலான சுற்றுநிரூபம் வெளியீடு

முன்னாள் அமைச்சர் விஜயகலாவின் வாகனம் விபத்து – தீவிர பிரிவில் அனுமதி

“திருக்கோவிலில் கணவனும், மனைவியும் தற்கொலை”