உள்நாடு

அங்கொட லொக்காவின் மரணம் தொடர்பில் உண்மை வெளியானது

(UTV | இந்தியா) – இந்தியா, கோவையில் இறந்த இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்காவின் மரணம் இயற்கையானதே என்று இந்தியாவின் சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது.

நிழல் உலக தாதா அங்கொட லொக்கா உடலில் விஷம் எதுவும் இல்லை என ஆய்வக பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது.

இவர் மாரடைப்பு காரணமாகவே இறந்ததாகவும் சிபிசிஐடி இனை மேற்கோள்காட்டி இந்தியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரேத பரிசோதனையினை மேற்கோள்காட்டி குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், விஷம் அல்லது வேறு ஏதும் சந்தேகத்தின் பேரில் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Related posts

கைதிகளை விடுவிப்பதில் நடந்துள்ள பல முறைகேடுகள் அம்பலம்!

editor

மக்கள் கண்ட கனவுகள் நனவாகும் யுகம் உருவாகியுள்ளது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

editor

எங்கள் கட்சியின் பாதுகாப்பு இராணுவ பாதுகாப்பை விட பலமானது