உள்நாடுபிராந்தியம்

அக்கரைப்பற்று, மீரா ஓடை குளத்தில் விழுந்து 2 வயது குழந்தை பலி

அக்கரைப்பற்று பகுதியில் உள்ள மீரா ஓடை குளத்தில் விழுந்து 2 வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

தண்ணீரில் மிதந்த குழந்தையை அவதானித்த உறவினர்கள், குழந்தையை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போதும் குழந்தை உயிரிழந்தது.

இன்று தனது இரண்டாவது பிறந்தநாளை கொண்டாடவிருந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்தது.

கடந்த ஜனவரி மாதமும் மீரா ஓடை குளத்தில் விழுந்து 6 வயது பிள்ளையொன்று உயிரிழந்திருந்தது.

இந்த இறப்புகளால் பெரும் சோகத்திற்கு உள்ளாகியுன்ன அப்பகுதி மக்கள், நேற்று (15) மாலை, “மீரா ஓடை குளத்தை சுற்றி பாதுகாப்பு வேலி அல்லது சுவர் கட்டப்பட வேண்டும்” என்று கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.

Related posts

சபாத் இல்லத்தை நீக்க பொத்துவில் சபை தீர்மானித்தால் மேலதிக நடவடிக்கை எடுக்கும் – வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் உறுதி

editor

16 வயதுடைய சிறுமி கொலை – கம்பளையில் சோகம்

editor

பிள்ளையானின் கடந்த காலத்தை ஆதாரங்களுடன் CIDயிடம் வெளிப்படுத்திய முன்னாள் சகா ஹுசைன்!

Shafnee Ahamed