விளையாட்டு

ஃபிபா உலக கிண்ண தொடர் – வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்த ரஷ்யா!

UTV | COLOMBO – உலக கிண்ண காற்பந்தாட்டத் தொடரின் முதலாவது போட்டியில் ரஷ்யா, சவுதி அரேபியாவை 5க்கு 0 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றுள்ளது.

1934ம் ஆண்டுக்குப் பின்னர் உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரை நடத்தும் நாடொன்று பெற்ற அதிசிறந்த வெற்றியாக இது கருதப்படுகிறது.

ஸ்டானிஸ்லேவ் செர்செசோவின் ரஷ்ய காற்பந்து அணி குறித்து அண்மைக்காலமாக பெரும் விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வந்தன.

குறிப்பாக ரஷ்ய அணி இறுதியாக விளையாடிய 7 போட்டிகளில் வெற்றிப் பெற்றிருக்கவில்லை.

இதனால் ரஷ்ய ஜனாதிபதி உள்ளிட்ட பலர் அணியை கடுமையாக விமர்சித்துவந்த போதும், நேற்றையதினம் இடம்பெற்ற போட்டியில் 78ஆயிரத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் மத்தியில் ரஷ்யா பெரும் வெற்றியை பதிவு செய்திருக்கிறது.

அதேநேரம் இந்த தொடரில் இன்றையதினம் எகிப்து மற்றும் உருகுவே அணிகள் மோதுவதுடன், இலங்கை நேரப்படி இந்த போட்டி இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

Related posts

யொவுன் -புர இளைஞர் முகாம் நாளை ஆரம்பம்

ஆர்ஜென்டினாவை வீழ்த்திய சவூதி அணியினருக்கு காத்திருந்த மகிழ்ச்சித் தகவல்

8வது ஆசிய உள்ளக மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு தங்கப்பதக்கம்