முல்லைத்தீவு, உடையார்கட்டு பகுதியில் அமைந்துள்ள பிரபலமான உணவகமொன்றில் நேற்று (11) இடம்பெற்ற அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அப்பகுதியை சேர்ந்த நபரொருவர் மதிய உணவுக்காக குறித்த உணவகத்தில் இருந்து 5 பார்சல் உணவுகளை வாங்கி சென்றுள்ளார்.
பின்னர் உணவை அவிழ்த்து சாப்பிடும் போது, மீன் பொரியலுக்குள் புழுக்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சம்பவம் தொடர்பாக உடனடியாக சுகாதார பரிசோதகருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
சம்பவ இடத்துக்குச் சென்ற சுகாதார அதிகாரிகள் உணவகத்தை பரிசோதித்து, சுகாதார விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதைக் கண்டறிந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, குறித்த உணவகம் மீது சுகாதார பிரிவினரால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உணவின் தரத்தினை பேணுவதில் அலட்சியம் காட்டும் உணவகங்கள் மீதான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
