உள்நாடுபிராந்தியம்

நீரில் மூழ்கி ஒருவர் பலி – அநுராதபுரத்தில் சோகம்

அநுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாலிப்பொத்தான குளத்தில் நீராடிக்கொண்டிருந்த மூதாட்டி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (04) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் இரத்மல்கஹவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதுடைய மூதாட்டி ஆவார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 122 ஆக அதிகரிப்பு

நத்தார் தினத்தின் உண்மையான அர்த்தத்தை புரிந்துகொள்வோம் – சஜித் பிரேமதாச

editor

குசல் மென்டிஸ் இற்கு கொவிட்