சூடான செய்திகள் 1

கடந்த 24 மணித்தியாலத்தில் நீரில் மூழ்கி நால்வர் உயிரிழப்பு

(UTV|COLOMBO)-கடந்த 24 மணித்தியாலத்தில் நீரில் மூழ்கி 04 பேர் உயிரிழந்துள்ளனர்.

பமுனுகம – ஏபாமுல்ல கடற்பரப்பிற்கு சென்று சிலர் நீராடிக் கொண்டிருந்த போது பெண் ஒருவர் அலையில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

45 வயதுடைய குறித்த பெண் போபிய – துடுவ பிரதேசத்தினை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வென்னப்புவ – வேலக்கந்தி தேவாலயம் மற்றும் மாத்தறை – மடிகே பிரதேசங்களில் அலையில் சிக்கி இரு வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதனிடையே பமுனுகம – தெலதுர நீர்தேகத்தில் நீரில் மூழ்கி 50 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

போதைப்பொருள் ஒழிப்புக்கு மக்களிடம் இருந்து தகவல்களைப் பெற விசேட கருமபீடம்

வைப்பாளர்களின் பணத்தை மீள வழங்குவதற்கான திட்டம் சமர்பிப்பு

லாஃப்ஸ் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு

editor